Publisher's Synopsis
மரணத்தின் பின் மனிதர் நிலை - மறைமலை அடிகள் Maranathin Pin Manithar Nilai by Maraimalai Adigal first published in 1911. இறைவன் தந்தருளிய இவ்வரிய மக்கட் பிறவியை இங்ஙனம் வறிதாக்குவதன் காரணம் என்னென்று நோக்கியவழி, அவை தாம் இறந்தபின் அடையும் நிலையை ஆராய்ந்து பாராமையே யென்பது நன்கு விளங்கிற்று. உயிர்கள் மறுமையில் எய்தும் நிலைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் சிற்சில உளவேனும், அவற்றில், எடுத்துக் காட்டப்பட்ட கதைகள் உண்மையுடையனவென்பது புலப்படாமையால், அந்நூற்பொருள் நம்பத் தக்கவைகளாக நமக்குத் தோன்றவில்லை. அவற்றைத் தவிர மறுமை நிலையை உள்ளவாறு விரித்துக்கூறும் வேறு நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால், இதனை இயற்ற லானோம்.